Blogger Templates

பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த - Blogல் பதிந்துள்ளேன்

- பொன்.சுதாகர்

Saturday, November 12, 2016

அழகிய தமிழில் போட்டோசாப் பாடம்




போட்டோ ஷாப் ஒரு பவர்புல் அப்பிளிகேஷன். போட்டோ ஷாப்பில் அடிப்படைகளை கற்று விட்டால் பின்னர் இலகுவாக பயன்படுத்திக்கொள்ளலாம். கற்பதற்கு ஆசை அத்துடன் நேரமும் இருக்கிறது என்றால் உங்களுக்காக இருக்கிறது இந்த வலைப்பதிவு.

துபாயில் வசிக்கும் கான் என்பவர் போட்டோசாப் பற்றிய அடிப்படை தகவல்களை அழகிய தமிழில் 1முதல் 60 பாடங்களாக தொகுத்து வைத்துள்ளார்.

அதில் 1 முதல் 24 வரையான பாடங்களை PDF பார்மட்டில் இலவசமாக டவுண்லோட் செய்து பின்னர் பயன்படுத்தலாம் என்கிறார் கான்.

போட்டோ சாப் கற்க வேண்டுமாயின் மனதில் வைக்க வேண்டிய சில குறிப்புக்கள், முதலில் சிரமம் இருப்பது போல் தோன்றினாலும் பின்னர் இதை விட சிறந்த மென்பொருள் இல்லை என உணர்வீர்கள்.

படம் வரைய தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் போட்டோசாப் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு.

என்று புதிதாக கற்க வருபவர்களுக்கு உற்சாகம் தருகிறார் கான். http://tamilpctraining.blogspot.com/




Share:

Hide Files Behind The Images

There are some important files or document you want to hide from others on your computer. To do that you might be creating folder inside folder to hide such files but in todays tutorial i will change this by teaching you a interesting trick to hide files behind images.To hide a file behind a image means that if any one opens that image he will see the image, but to see the hidden file we need to open that image in a specific way. So lets get started.


How To Hide File Behind Image ?

1. Select an image to be used for hiding file behind the image.

2. Now select a file to hide behind the image and make it in .RAR format. With the help of the WinRAR.

3. And most important is that paste both the files on desktop. You may do this anywhere instead of desktop if you have some basic understanding of command line.

4. Now open cmd by going to Start - Accessories - Command Prompt and type following commands in it.

cd Desktop



5. CD stands for change directory by typing above command you change your directory to desktop. After that type command given below.

Copy /b imagename.jpg + filename.rar finalimage.jpg


•Replace imagename.jpg with the name of image you want your file to be hidden behind. Don't forget to add image format (Eg: .jpg,.png,.gif)

•Replace filename with name of your file you want to hide. It must be in .rar format.

•Finally Replace finalimage.jpg with whatever name you want your final image with hidden files should be. This is the image where your file will be hidden.

6. Now when you will try to open this newly created image it will open as normal image, but to open you hidden file you need follow steps given below.

How To Access Hidden File ?

To access your hidden file you need to open the newly created image in winrar. Just follow simple steps given below to do that.


1. Open winrar

2. Now locate your image and open it or simply drag your image in winrar.

3. Extract the file and done.
Share:

காலண்டர்கள் எப்படி உருவானது?

நண்பர்களே நாம் அனைவருமே புத்தாண்டை  வரவேற்க ஆவலுடனும் உற்சாகத்தோடும் காத்திருக்கிறோம், புது வருடத்திற்கு விதவிதமான வடிவமைப்புகளில் காலண்டர்கள் வாங்கி மகிழுவோம் காலண்டர்கள் நமது பயன்பாட்டுகளில் மிகவும் முக்கியமான ஒன்று அத்தகைய காலண்டர்கள் எப்படி உருவானது என்று காலண்டர் பிறந்த கதையைத் தெரிந்து கொள்வோம்!

கணக்கு கூட்டுவது எனும் பொருள் தரும் ‘கலண்டே’ எனும் இலத்தீன் உச்சரிப்பிலிருந்து உருவானதுதான் காலண்டர் (Calender) எனும் ஆங்கிலச் சொல். புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களே துவக்ககால காலண்டர்களுக்கு அடிப்படையாக அமைந்தன. நைல் நதியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கை அடிப்படையாகக் கொண்டு புராதன எகிப்தியர் உருவாக்கிய காலண்டர் இதற்குச் சான்று. இன்று நம் முன்னே இருக்கும் காலண்டரின் அடிப்படை கி.மு. 45 இல் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியன் காலண்டரே.

இன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் காலண்டரே முறையே கிரிகோரியன் காலண்டர். பதிமூன்றாம் போப் ஆண்டவராக இருந்த போப் கிரிகோரியின் ஆனைப்படி, அலோயிஷியஸ் ல்லியஸ் என்னும் மருத்துவரே 1582 பிப்ரவரி 24 இல் ஜீலியன் காலண்டரில் காணப்பட்ட குறைபாடுகளைத் திருத்தியமைத்து கிரிகோரியன் காலண்டரை உருவாக்கினார். ஏசு கிருஸ்துவின் பிறந்த தினத்தை அடிப்படையாக கொண்ட இக்காலண்டரின் வருடங்கள் ஒழுங்கமைப்பட்டது.

ஸ்பெயின், போர்ச்சுக்கல்,போலிஷ்லிதுவேனியன் காமன்வெல்த், இத்தாலியின் பெரும்பாலான பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் காலண்டரை முத்ன் முதலில் ஏற்றுக்கொண்டன. 1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரியன் காலண்டரைப் பயன்படுத்தத் துவங்கின. இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752 ஆண்டிற்கு பின்பே கிரிகோரியன் காலண்டரை அங்கீகரித்தன. 1923 பிப்ரவரி 15 ல் கிரிகோரியன் காலண்டரை அங்கீகரித்த கிரீஸே இந்தப் பட்டியலின் கடைசி நாடு.

மாதங்களின் பெயர் வரலாறு:

ஜனவரி: ரோமன் இதிகாசத்தில் “துவக்கங்களின் கடவுளாக” காணப்பட்ட ஜானஸ்லானுயாரியஸ் கடவுளின் பெயரே கிரிகோரியன் காலண்டரின் முதல் மாதமான ஜனவரிக்கு வழங்கப்பட்டது.

பிப்ரவரி: ஜூலியன் மற்றும் கிரிகோரியன் காலண்டரின் இரண்டாவது மாதம் பிப்ரவரியே “சுத்தப்படுத்தல்” எனும் பொருள் தரும் ஃபெப்ரம் எனும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததே பிப்ரவரி. புராதன ரோமர்கள் பிப்ரவரி மாதம் 15 ம் தேதி ஃபெப்ரா எனும் சுத்தப்படுத்தும் செயலைச் செய்வதற்காக சூட்டப்பட்டதே இந்த பிப்ரவரி.

மார்ச்: ரோமர்களின் போர்க்கடவுளான “மார்ஸி: என்பதிலிருந்து உருவானதே மார்ச் கி.மு 700 களில் ரோமாபுரியை ஆண்ட நுமபோம் விலஸ் மன்னர் ஜனவரியையும், பிரபரிவரியையும் ஒன்றினைப்பதற்கு முன்பு வரை மார்ச் மாதமே ரோமக் காலண்டரின் முதல் மாதம்.

ஏப்ரல்: ஏபரல் மாதப் பெயர் பிறந்தது பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன. ‘திறக்குக’ எனும் பொருள் தரும் ‘அபேரிரே’ எனும் இலத்தீன் சொல்லிலிருந்துதான் ஏப்ரல் மாதத்திற்கு அப்பெயர் கிடைத்தது என்பது ஒரு கருத்து. ரோம ஐதீகப்படி எல்லா மாதங்களின் பெயர்களும் கடவுள் பெயரிலிருந்தே துவங்குகிறது. அதன்படி ஏப்ரல் மாதம் வீனஸ் தேவதையின் மாதமாகக் கருதப்படுகிறது கிரேக்கர்கள் வீனஸை அஃப்ரோடைட் என்றே அழைக்கினறனர் அதன்படி வீனஸ் தேவதையின் மாதம் எனும் பொருள் தரும் ‘அப்லோரிஸ்’ என்னும் சொல்லே ஏப்ரல் மாதத்திற்கு வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

மே: கிரேக்கக் கடவுளான ‘மாயியா’ வின் பெயரே மே மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ளது

ஜூன்: ஜூபிடர் கடவுளின் மனைவியாக புராதன ரோமர்கள் கருதிய ’ஜூனோ’ என்பதிலிருந்தே ஜூன் மாதம் பிறந்தது

ஜூலை: ரோமக் காலண்டரின் மாதமாக கருதப்பட்ட, இலத்தீன் மொழியின் ‘கவிண்டிலஸ்’ என அழைக்கப்பட்ட இம்மாதத்தில்தான் ஜூலியஸ் சீசர் பிறந்தார். அதையடுத்தே இம்மாதத்திற்கு ஜூலை எனப் புதுப்பெயர் சூட்டப்பட்டது

ஆகஸ்ட்: ஆகஸ்ட் மாதம் புராதன ரோமக் காலண்டரில் ஆறாவது மாதமாகக் கருதப்பட்டது. ஆறாவது எனப் பொருள்படும் ‘ஸெக்டிலஸ்’ எனும் இலத்தீன் சொல்லே துவக்ககால ரோமக் காலண்டரில் இம்மாதத்தின் பெயராக ப் ப்யன்படுத்தப்பட்டிருந்தது. பிற்பாடு கி.மு எட்டாம் நூற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியா நகரை வென்ற அகஸ்டஸ் சக்ரவர்த்தியின் சிறப்பை வெளிப்படுத்தும் விதத்தில் இம்மாதத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

செப்டம்பர்: இலத்தீன் மொழியில் ‘ஏழு ‘ எனப்பொருள் வரும் “செப்டம்” என்ற சொல்லே புராதன ரோமர்களின் காலண்டரில் ஏழாவது மாதத்திற்கு வழங்கப்பட்டது. அதையொட்டி கிரிகோரியக் காலண்டரும் அப்பெயரைப் பின்பற்றியது.

அக்டோபர்: இலத்தீன் மொழியில் ‘எட்டு’ எனப் பொருள் தரும் “அக்டோ” என்ற சொல்லிலிருந்து வந்ததே அப்பெயர்.

நவம்பர்: ஒன்பது எனும் பொருள் தரும் ‘நோவம்’ எனும் இலத்தீன் சொல்லிலிருந்து உருவானதே நவம்பர்.

டிசம்பர்: இலத்தீன் மொழியில் ‘பத்து’ எனும் பொருள் தரும் “டிசம்பர்” ரோமக் காலண்டரில் பத்தாவது மாதமாக இருந்தது.


இந்திய தேசியக் காலண்டர்

கி.பி. 78 இல் துவங்கும் சக காலண்டரே இந்தியாவின் தேசியக் காலண்டராக கருதப்படுகிறது.சாதவாஹன மன்னரான சாலிவாஹன் உஜ்ஜைனி மன்னர் விக்ரமாதித்தனை போரில் வென்றதையடுத்து சக வருடம் துவங்கியது . இந்தியாவில் கிரிகோரியன் காலண்டரும் சக வருடக் காலண்டரும் அதிகாரப் பூர்வமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. 1957 இன் காலண்டர் மறு சீரமைப்பு கமிட்டியே சக காலண்டரை அதிகாரப் பூர்வ காலண்டராக அங்கீகரிக்கப் பரிந்துரை வழங்கியது. கிரிகோரியன் காலண்டரின் 1957 மார்ச் 22 ஆம் தேதியில்தான் சக வருடத்தின் முதல் மாதமான சைத்ரம் 1 , 1879 இல் அதிகாரப் பூர்வமாகத் துவங்கியது.

தமிழ்க் காலண்டர்:

சூரியனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. கிரிகோரியனைப் போன்றே சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 மாதங்கள் இதிலும் உண்டு

இஸ்லாமியக் காலண்டர்:

முகமது நபி மெக்காவிலிருந்து மதினாவுக்குச் சென்ற நாளிலிருந்துதான் இஸ்லாமிக் காலண்டரின் வருடம் துவங்குகிறது. கி.பி. 622 இல் நிகழ்ந்தது நபியின் பயணம். சந்திரனை அடிப்படையாக கொண்ட இது 12 மாதங்கள் கொண்டது

ஜூலியன் காலண்டர்

கி.மு.45 இல் பிரபல வானியல் நிபுணராக இருந்த கோஸிஜின்ஸி என்பவரின் அறிவுரைப் படி இக்காலண்டரை நடைமுறைப் படுத்தியவர் ஜூலியஸ் சீசரே. தற்போது பரவலாகப் பயன்படுத்தப் பட்டு வரும் கிரிகோரியன் காலண்டரின் முன்னோடி இது. ஜூலியன் காலண்டரின்படி ஒரு வருடத்திற்கு 365 நாட்கள். “லீப் வருடம்” என்பது ஜூலியன் தந்த கொடையே. 
Share:

டி.சி.ஐ.எம்.போல்டரில் போட்டோ

எந்த டிஜிட்டல் கேமராவாக இருந்தாலும், அது போனில் பதியப்பட்டு கிடைத்தாலும், அல்லது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோனில் உள்ள கேமரா அப்ளிகேஷனாக இருந்தாலும், அதில் நாம் எடுக்கும் போட்டோக்கள் அனைத்தும் DCIM என்ற போல்டரிலேயே வைக்கப்படுகிறது. டி.சி.ஐ.எம். (DCIM) என்பது “Digital Camera Images” என்பதன் சுருக்கமாகும்.


இந்த டி.சி.ஐ.எம். போல்டர் என்பது ஒரு தகுதர (Standardization) வரையறை ஆகும். இந்த தர நிலை 2003 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. DCF (Design rule for Camera File system) என்ற கட்டமைப்பின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது. JEITA, the Japan Electronics and Information Technology Industries Association என்ற அமைப்பு இதனை உருவாக்கியது. 2003ல் வகுக்கப்பட்ட தரம், பின்னர் 2010ல் புதுப்பிக்கப்பட்டது.

டிஜிட்டல் உலகில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு மீடியாக்களுக்கிடையே ஒன்றுக்கொன்று தகவல் பரிமாறிக் கொள்ள இந்த தரமுறை உதவுகிறது. எடுத்துக் காட்டாக, இந்த தரமுறைப் படி, இதில் தகவல் பரிமாறிக் கொள்ள நாம் பயன்படுத்தும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் FAT12, FAT16, FAT32 அல்லது exFAT என்ற வகையில் பார்மட் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதன் நோக்கம், டிஜிட்டல் கேமராக்களும், மெமரி கார்ட்களும் ஒன்றை ஒன்று புரிந்து கொண்டு இயங்க வேண்டும் என்பதே.

டி.சி.எம். டைரக்டரியும் போல்டர்களும்: DCF கட்டமைப்பின் முதல் இலக்கு, டிஜிட்டல் போட்டோக்கள் அனைத்தும் “DCIM” டைரக்டரியில் சேவ் செய்யப்பட வேண்டும் என்பதே. இந்த டைரக்டரியில், துணை டைரக்டரிகளும் அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொன்றிற்கும் 100 முதல் 999 வரை குறியீடு எண் வழங்கப்படும். இந்த எண்ணுடன் எழுத்துகளும் எண்களுமாக ஐந்து குறியீடுகள் இணைக்கப்படும். ஒவ்வொரு கேமரா தயாரிப்பு நிறுவனமும், தனக்கென ஒரு குறியீடு அமைப்பினை எடுத்துக் கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, அதிர்ஷ்டவசமாக ஆப்பிள் தன் பெயர் அடங்கிய குறியீட்டினை அமைத்துக் கொண்டது. அதன் டைரக்டரியில் உள்ள போல்டர்கள் “100APPLE,” “101APPLE,” என்ற வகையில் செல்லும். இந்த ஒவ்வொரு சப் டைரக்டரியிலும், இமேஜ் எனப்படும் போட்டோக்கள் பைல் செய்யப் படும். இந்தக் குறியீடுகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. நாம் எடுக்கும் போட்டோக்கள், நாம் எடுக்கும் வரிசையிலேயே சேவ் செய்து அமைக்கப்படும். எடுத்துக் காட்டாக, நாம் எடுக்கும் போட்டோக்கள் DSC_0001.jpg, DSC_0002.jpg என்ற வரிசையில் அமைவதனைக் கண்டிருப்பீர்கள்.

இதே போல்டரில், .THM பைல்களும் அமைந்திருப்பதனைக் காணலாம். இவை JPG படங்களுடன் கூடுதலாக அமையும். எடுத்துக் காட்டாக, உங்கள் டிஜிட்டல் கேமராவினைப் பயன்படுத்தி, வீடியோ ஒன்று எடுக்கிறீர்கள். இது .MP4 பைலாக சேவ் செய்யப்படும்.

இப்போது, DSC_0001.MP4 file மற்றும் DSC_0001.THM என இரு பைல்கள் சேவ் செய்யப்பட்டிருப்பதனைக் காணலாம். இதில் .MP4 என்பது அந்த வீடியோ பைலாகும். .THM பைலில், சிறிய அளவிலான வீடியோ காட்சிக்கான ஒரு படமும், அது குறித்த தகவல்களும் அடங்கியிருக்கும். இந்த பைல், தான் சார்ந்த வீடியோ குறித்த தகவல்களைக் காட்டும். அதாவது வீடியோவினை லோட் செய்திடாமலேயே காட்டப்படும்.

ஏன் எல்லாரும் DCF தரமுறையைப் பின்பற்றுகின்றனர்?

DCF தரமுறை மாறா நிலையில் (“de facto”) அனைத்து டிஜிட்டல் கேமரா நிறுவனங்களாலும், ஸ்மார்ட் போன் வடிவமைப்பவர்களாலும், பின்பற்றப்படும் ஒரு தர முறையாக உள்ளது. tஎனவே, DCIM வடிவமைப்பு என்பதனை, டிஜிட்டல் கேமராவிற்கான படங்கள் மாற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர், தானாகவே, ஒரு டிஜிட்டல் கேமரா அல்லது மைக்ரோ எஸ்.டி. கார்ட் கம்ப்யூட்டர் மற்றும் பிற சாதனங்களுடன் இணைக்கப்படுகையில், அவற்றில் உள்ள போட்டோக்களைப் புரிந்து கொண்டு, அவற்றை மாற்றுவதற்குத் தயாராகிறது.

ஸ்மார்ட் போன்களில் உள்ள டி.சி.ஐ.எம். போல்டர்களும் இதே நோக்கத்தினையும் செயல்பாட்டினையும் மேற்கொள்கின்றனர். நீங்கள் ஓர் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்ட் போனை, உங்கள் கம்ப்யூட்டருடன் இணைக்கையில், அந்த கம்ப்யூட்டர் அல்லது போட்டோ லைப்ரரி சாப்ட்வேர், டி.சி.ஐ.எம். போல்டரைக் கண்டு கொள்கிறது. அவற்றில் தன் சாதனத்திற்கு மாற்றப்படக் கூடிய போட்டோக்கள் இருப்பதனைக் கண்டுக் கொள்கின்றன. அவற்றை மாற்றிக் கொள்ளவும் தயாராக இருப்பதனை அறிவிக்கின்றன.

ஏன் டி.சி.ஐ.எம். என அமைக்க வேண்டும். இது பலருக்குப் புரியவில்லையே? “Photos” என்றே இதற்குப் பெயரிட்டிருக்கலாமே? என்ற கேள்விகள் நம் மனதில் தோன்றலாம். அல்லது “Pictures”/ Videos” என்று பெயரிட்டிருக்கலாமே என்று எண்ணலாம். இப்படி ஒவ்வொரு நிறுவனமும் ஒரு பெயரை வைத்துக் கொண்டால், அதனைக் கண்டறியப் பயன்படுத்தப்படும், சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் இயங்க முடியாமல் போய்விடும். மேலும் ஒவ்வொரு கேமராவும் ஒரு முறையில் தங்களுடைய வடிவமைப்பை அமைத்துக் கொண்டால், மைக்ரோ எஸ்.டி. கார்ட்களை, கேமராக்களுக்கிடையே மாற்றி மாற்றி எளிதாகப் பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு கேமராவிற்கும், அதற்கேற்றபடி பார்மட் செய்திட வேண்டியதிருக்கும். எனவே, இந்த தரமுறை வகுக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும், டிஜிட்டல் சாதனங்கள் இடையே, ஒரு தரமுறை இருந்தால் தான், அனைத்தும் சீராக, எளிதாக இயங்க முடியும்.
Share:

ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பதன் உண்மையான கருத்து என்ன?

"ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும்." என்று இந்த பழமொழிக்குப் பொருள் கொண்டு "ஆமை"யின் மேல் ஒரு "துரதிருஷ்டசாலி" என்னும் பழியையும் சேர்த்துப் போடுகின்றனர் நம் மக்கள்.

இக்கருத்து சரியாகுமா?. இல்லை. ஆமை அப்படி என்னதான் தவறு செய்தது? நாம் ஏன் அதன் மேல் வீண்பழி போட வேண்டும்?. நீர்நிலைகளில் வசிக்கும் இயல்புடைய ஆமை நமது வீட்டிற்கு ஏன் வர வேண்டும்?. சரி தவறுதலாக எப்படியோ ஒரு ஆமை நமது வீட்டிற்குள் புகுந்து விட்டால் எப்படி அந்த வீடு உருப்படாமல் போகும்?. மாறாக, ஆமை வீட்டிற்குள் புகுந்தால் உங்கள் வீட்டிற்கு இலக்குமி (திருமகள்) வரப்போகிறாள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஆமை திருமாலின் அருள் பெற்ற ஒரு உயிரினம் ஆகும். திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றல்லவா இந்த ஆமை அவதாரம். திருமால் இருக்கும் இடம் தானே திருமகள் வாசம் செய்யும் இடம். எனவே இந்த தவறான கருத்தை இன்றோடு கைவிடுங்கள்.

அப்படி என்றால் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள் என்ன?. வழக்கம் போல சொல் பிழைகளால் இந்தப் பழமொழியில் பொருள் மாறுபாடு அடைந்துள்ளது. தூய செந்தமிழ்ச் சொற்கள் கொச்சை வழக்கில் எப்படி எல்லாம் மாறுபாடு அடைகின்றன என்பதற்கு இந்தப் பழமொழியும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

உங்களுக்குக் காளானைப் பற்றித் தெரியும். புழுத்துப்போன மரம், மாட்டுச்சாணம், வைக்கோல் முதலான பொருட்களில் இருந்து சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தானாகத் தோன்றும் ஒரு வகைப் பூஞ்சை தான் இது. இருட்டும் ஈரப்பதமும் காளான் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள். எப்போதுமே இருளாகவும் ஈரமாகவும் மக்கிப்போன பழைய மரங்களுடன் இருக்கும் வீட்டில் காளான் இயல்பாகவே தோன்றும். இது போன்ற வீட்டில் குடி இருப்பவர்கள் உடல்நலத்துடன் இருக்க முடியுமா?. முடியவே முடியாது. ஏனென்றால் இந்தச் சூழ்நிலையில் வசிக்கும் மனிதர்களுக்கு காசநோய், மனநோய், சருமநோய் முதலான பல நோய்கள் தொற்றிக் கொள்ளும். கதிரவனின் ஒளியும் வெப்பமும் இல்லாத வீட்டிற்கு வெளியாட்களும் வர விரும்ப மாட்டார்கள். எனவே இது மாதிரி வீட்டில் வசிப்பவர்கள் கவனிப்பார் யாருமின்றி நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தேடிக்கொள்வர். ஆக மொத்தத்தில் காளான் பூத்த இந்த வீடு உருப்படாமலேயே போய்விடும். இதைத்தான் இந்த பழமொழியும் கூறுகிறது. சரியான பழமொழி இது தான் :-

"ஆம்பி பூத்த வீடு உருப்படாது."
(ஆம்பி = காளான்)

இதில் உள்ள தூய தமிழ்ச்சொற்களான 'ஆம்பி பூத்த' என்பன கொச்சைச் சொற்களாக மாறி பின்னர் உருமாறி இறுதியில் மீண்டும் தூய தமிழ் வடிவம் பெற்று இவ்வாறு நிற்கிறது. இந்த வரலாறு கீழே காட்டப்பட்டு உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், ஆமை புகுந்த வீடு உருப்படாது எனும் பழமொழிக்குப் பலப் பொருள்கள் சொல்லப்படுகின்றன. அதாவது, கல்லாமை, அறியாமை, பொறாமை போன்ற ஆமை என்ற ஈற்றில் முற்றுப்பெறும் சொற்கள் நிறைந்திருக்கும் இல்லங்கள் முன்னேறுவது கடினம். அப்பொருள்களும் ஏற்புடையதே.

ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகுந்த 
Share:

நாம் அன்றாடம் பாவிக்கும் பிறமொழி சொற்களுக்குரிய தூய தமிழ்ச்சொற்கள் சில

வ.எண்பிற மொழிப்பெயர்கள்தமிழ்ப் பெயர்கள்
1டிரேடரஸ்  வணிக மையம்
2கார்ப்பரேஷன்   நிறுவனம்
3ஏஜென்சி   முகவாண்மை
4சென்டர்   மையம், நிலையம்
5எம்போரியம்   விற்பனையகம்
6ஸ்டோரஸ்  பண்டகசாலை
7
ஷாப்
 
கடை, அங்காடி
8அண்கோ   குழுமம்
9ஷோரூம்   காட்சியகம், எழிலங்காடி
10ஜெனரல் ஸ்டோரஸ்  பல்பொருள் அங்காடி
11டிராவல் ஏஜென்சி   சுற்றுலா முகவாண்மையகம்
12டிராவலஸ்  போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13எலக்டிரிகலஸ்  மின்பொருள் பண்டகசாலை
14ரிப்பேரிங் சென்டர்   சீர்செய் நிலையம்
15ஒர்க் ஷாப்   பட்டறை, பணிமனை
16ஜூவல்லரஸ்  நகை மாளிகை, நகையகம்
17டிம்பரஸ்  மரக்கடை
18பிரிண்டரஸ்  அச்சகம்
19பவர் பிரிண்டரஸ்  மின் அச்சகம்
20ஆப்செட் பிரிண்டரஸ் மறுதோன்றி அச்சகம்
21லித்தோஸ்  வண்ண அச்சகம்
22கூல் டிரிங்கஸ்  குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23ஸ்வீட் ஸ்டால்   இனிப்பகம்
24காபி பார்   குளம்பிக் கடை
25ஹோட்டல்   உணவகம்
26டெய்லரஸ்  தையலகம்
27டெக்ஸ்டைலஸ்  துணியகம்
28ரெடிமேடஸ்  ஆயத்த ஆடையகம்
29சினிமா தியேட்டர்   திரையகம்
30வீடியோ சென்டர்   ஒளிநாடா மையம், விற்பனையகம்
31போட்டோ ஸ்டூடியோ   புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32சிட் பண்ட்   நிதியகம்
33பேங்க்   வைப்பகம்
34லாண்டரி   வெளுப்பகம்
35டிரை கிளீனரஸ்  உலர் வெளுப்பகம்
36அக்ரோ சென்டர்    வேளாண் நடுவம்
37அக்ரோ சர்வீஸ்  உழவுப் பணி
38ஏர்-கண்டிஷனர்   குளிர் பதனி, சீர்வளி
39ஆர்டஸ்  கலையகம், கலைக்கூடம்
40ஆஸ்பெஸ்டரஸ்  கல்நார்
41ஆடியோ சென்டர்   ஒலியகம், ஒலிநாடா மையம்
42ஆட்டோ   தானி
43ஆட்டோமொபைலஸ் தானியங்கிகள், தானியங்கியகம்
44ஆட்டோ சர்வீஸ்  தானிப் பணியகம்
45பேக்கரி   அடுமனை
46பேட்டரி சர்வீஸ்  மின்கலப் பணியகம்
47பசார்   கடைத்தெரு, அங்காடி
48பியூட்டி பார்லர்   அழகு நிலையம், எழில் புனையகம்
49பீடா ஸ்டால்   மடி வெற்றிலைக் கடை
50பெனிஃபிட் பண்ட்   நலநிதி
51போர்டிங் லாட்ஜத்ங் உண்டுறை விடுதி
52பாய்லர்   கொதிகலன்
53பில்டரஸ்  கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54கேபிள்   கம்பிவடம், வடம்
55கேபஸ்  வாடகை வண்டி
56கபே   அருந்தகம், உணவகம்
57கேன் ஒர்கஸ்  பிரம்புப் பணியகம்
58கேண்டீன்   சிற்றுண்டிச்சாலை
59சிமெண்ட்   பைஞ்சுதை
60கெமிக்கலஸ்  வேதிப்பொருட்கள்
61சிட்ஃபண்ட்   சீட்டு நிதி
62கிளப்   மன்றம், கழகம்,உணவகம், விடுதி 
63கிளினிக்   மருத்துவ விடுதி
64காபி ஹவுஸ்  குளம்பியகம்
65கலர் லேப்   வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
66கம்பெனி   குழுமம், நிறுவனம்
67காம்ப்ளகஸ்  வளாகம்
68கம்ப்யூட்டர் சென்டர்   கணிப்பொறி நடுவம்
69காங்கிரீட் ஒர்கஸ்   திண்காரைப்பணி
70கார்ப்பரேஷன்   கூட்டு நிறுவனம்
71கூரியர்   துதஞ்சல்
72கட்பீஸ் சென்டர்   வெட்டுத் துணியகம்
73சைக்கிள்   மிதிவண்டி
74டிப்போ   கிடங்கு, பணிமனை
75டிரஸ்மேக்கர்   ஆடை ஆக்குநர்
76டிரை கிளீனரஸ்  உலர் சலவையகம்
77எலக்ட்ரிகலஸ்  மின்பொருளகம்
78எலக்ட்ரானிகஸ்  மின்னணுப் பொருளகம்
79எம்போரியம்   விற்பனையகம்
80எண்டர்பிரைசஸ்  முனைவகம்
81சைக்கிள் ஸ்டோரஸ்மிதிவண்டியகம்
82பேக்டரி   தொழிலகம்
83பேன்சி ஸ்டோர்   புதுமைப் பொருளகம்
84பாஸ்ட் புட்   விரை உணா
85பேகஸ்  தொலை எழுதி
86பைனானஸ்  நிதியகம்
87பர்னிச்சர் மார்ட்   அறைகலன் அங்காடி
88கார்மென்டஸ்  உடைவகை
89ஹேர் டிரஸ்ஸர்   முடி திருத்துபவர்
90ஹார்டு வேரஸ்  வன்சரக்கு, இரும்புக்கடை
91ஜூவல்லரி   நகை மாளிகை
92லித்தோ பிரஸ்  வண்ண அச்சகம்
93லாட்ஜ்   தங்குமனை, தங்கும் விடுதி
94மார்க்கெட்   சந்தை அங்காடி
95நர்சிங் ஹோம்   நலம் பேணகம்
96பேஜர்   விளிப்பான், அகவி
97பெயிண்டஸ்  வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98பேப்பர் ஸ்டோர்   தாள்வகைப் பொருளகம்
99பாஸ் போர்ட்   கடவுச்சீட்டு
100பார்சல் சர்வீஸ்  சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101பெட்ரோல்   கன்னெய், எரிநெய்
102பார்மசி   மருந்தகம்
103போட்டோ ஸ்டூடியோஒளிபட நிலையம்
104பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி   நெகிலி தொழிலகம்
105பிளம்பர்   குழாய்ப் பணியாளர்
106பிளைவுடஸ்  ஒட்டுப்பலகை
107பாலி கிளினிக்   பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108பவர்லும்   விசைத்தறி
109பவர் பிரஸ்  மின் அச்சகம்
110பிரஸ், பிரிண்டரஸ்  அச்சகம், அச்சுக்கலையகம்
111ரெஸ்டாரெண்ட்   தாவளம், உணவகம்
112ரப்பர்   தொய்வை
113சேல்ஸ் சென்டர்   விற்பனை நிலையம்
114ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்வணிக வளாகம்
115ஷோரூம்   காட்சிக்கூடம்
116சில்க் அவுஸ்  பட்டு மாளிகை
117சோடா பேக்டரி   வளிரூர்த்தொழில், காலகம்
118ஸ்டேஷனரி   மளிகை, எழுதுபொருள்
119சப்ளையரஸ்  வங்குநர்,
120ஸ்டேஷனரி   தோல் பதனீட்டகம்
121டிரேட்   வணிகம்
122டிரேடரஸ்  வணிகர்
123டிரேடிங் கார்ப்பரேஷன்வணிகக் கூட்டிணையம்
124டிராவலஸ்  பயண ஏற்பாட்டாளர்
125டீ ஸ்டால்   தேனீரகம்
126வீடியோ   வாரொளியம், காணொளி
127ஒர்க் ஷாப்   பட்டறை, பயிலரங்கு
128ஜெராகஸ்  படிபெருக்கி, நகலகம்
129எக்ஸ்ரே   ஊடுகதிர்
Share:

உள்ளங்கையில் ரேகைகள் எதற்கு?

எமது உடலின் தோலில் உள்ளங் கால்களிலும் உள்ளங் கைகளிலுமே ரேகைகள் நிறைந்து காணப்படுகின்றன. உடலின் ஏனைய பாகங்களிலுள்ள தோலில் ரேகைகள் இருப்பதில்லை. அவை மிருதுவாகவே காணப்படுகின் றன. உள்ளங்கைக்கும் உள்ளங்காலுக்கும் இப்படியொரு விசேடம் ஏன்? 

கூர்ப்பினால் வந்துள்ள இசைவாக்கமே இதுவென உயிரியலாளர்கள் கூறுகின்றனர். தரையில் நடப்பதற்கு உராய்வு இல்லாமலிருக்க வேண்டும். அதற்கான தவாளிப்புதான் உள்ளங்கால் ரேகைகள். அதுபோன்றுதான் உள்ளங்கை ரேகைகள் பற்றிப் பிடிப்பதற்கு உதவு கின்றன. உள்ளங்கையில் ரேகைகள் இல்லாது போனால் பற்றிப் பிடிக்கும் போது வழுக்கி விடுவதற்கு இடமுண்டு. இதனைத் தடுப்பதற்கே ரேகைகள்.
Share:

பிளாஸ்டிக் (Plastic) எப்படி உருவானது?

பதினெட்டாம் நூற்றாண்டில் கால்நடைகளின் (குறிப்பாக மாடுகளின்) கொம்புகளை பற்றி துவங்கிய ஆய்வுகள்தான் பிற்காலத்தில் பிளாஸ்டிக் உருவாக மூலகாரணமாக அமைந்தது என்றால் மிகையில்லை. பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் கால்நடைகளின் கொம்புகள், பால்புரதங்களால் (Casein) தான் உருவாக்கப்படுகிறது என்பதை பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில் மனிதன் தெரிந்துகொண்டான். கால்நடைகளின் கொம்புகள் பிளாஸ்டிக்கின் தோற்றத்தை ஒத்துக் காணப்பட்டாலும் கூட அவற்றின் கொம்புகள் மக்கும் திறன் கொண்டவை ...!

இதைத்தொடர்ந்து இயற்கையாக ரப்பர் மரங்களிலிருந்து கிடைக்கும் ரப்பர் பாலிருந்து பிளாஸ்டிக் தயாரிக்கும் முயற்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வேதியல் வல்லுனர்கள் தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் 1839-ஆம் ஆண்டு சார்லஸ் குட்இயர் (Charles Goodyear, 1800 – 1860 AD) என்ற அமெரிக்க கண்டுபிடிப்பாளர் (American Inventor) ரப்பர் மரங்களிலிருந்து கிடைக்கும் பாலுடன் (Rubber Milk) கந்தகம் (Sulfur) கலந்து சூடாக்கி வல்கனைசிங் ரப்பர் (Vulcanizing Rubber) என்ற ஒருவகை ரப்பரை தயாரிக்கும் முறையை கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்புதான் செயற்கை பிளாஸ்டிக் உருவாக்கத்திற்க்கு ஒரு ஊன்றுகோலாக அமைந்தது என்று சொல்லலாம்.

சார்லஸ் குட்இயரின் கண்டுபிடிப்பை முன்மாதிரியாகக்கொண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸ் (Alexander Parkes, 1813 – 1890 AD) என்ற உலோகவியல் வல்லுனர் (Metallurgist Specialist) உலகமே வியக்கும் வண்ணம் பார்க்ஸின் (Parkesine) என்று அழைக்கப்பட்ட உலகின் முதல் செயற்கை பிளாஸ்டிக்கை 1856-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். தாவரங்களிலிருந்து பெறப்பட்ட மரத்தாதுக்களுடன் (Cellulose) நைட்ரிக் அமிலத்தை சேர்த்து சூடாக்கி இதனை அவர் தயாரித்திருந்தார். இந்த பிளாஸ்டிக், வெப்பப்டுத்தும்போது இளகும் தன்மைகொண்டதாகவும் குளிர்விக்கும் போது இறுகி மீண்டும் தனது பழைய கடினதன்மையை எட்டும் தன்மைகொண்டதாகவும் இருந்தது, இதனால் பிளாஸ்டிக்கை வேண்டிய தோற்றத்தில் சுலபமாக வடிவமைத்துக்கொள்ள முடிந்தது.

இங்கிலாந்து நாட்டிலுள்ள லண்டன் மாநகரில் 1862-ஆம் ஆண்டு நடந்த உலக சர்வதேச கண்டுபிடிப்பு கண்காட்சியில் (Invention of World Great International Exhibition, London) தனது இந்த பிளாஸ்டிக் கண்டுபிடிப்பை பகிரங்கமாக வெளியுலகிற்கு செய்து காட்டினார். அவரது இந்த கண்டுபிடிப்பு அந்த ஆண்டு சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான வெண்கலப் பதக்கத்தை தட்டிச்சென்றது. தொடர்ந்து 1856 – ஆம் ஆண்டு 'Parkesine Company' என்ற பெயரில் உலகின் முதல் பிளாஸ்டிக் தயாரிக்கும் கம்பனியை துவக்கி பிளாஸ்டிக் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தார். இவரது செயமுறைப்படி பிளாஸ்டிக் தயாரிக்க அதிக அளவில் மரத்தாதுக்கள் (Cellulose) தேவைப்பட்டதால் இவரது நிறுவனம் மிகக்குறைந்த அளவே பிளாஸ்டிக் உற்பத்தி செய்ய முடிந்தது, இதன் காரணமாக வணிகரீதியில் இவரது பார்க்ஸின் பிளாஸ்டிக் (Parkesine Plastic) வெற்றிபெற முடியாமல் போய்விட்டது.

பிளாஸ்டிக் தயாரித்தலின் அடுத்தகட்டம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் எட்டப்பட்டது. தற்போது இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு எப்படி உட்சபச்ச ஜிரத்தில் இருக்கிறதோ அதுபோல பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு உட்சபச்ச ஜிரத்தில் இருந்தது. அப்போது பில்லியர்ட்ஸ் விளையாட தேவைப்பட்ட பந்துகள் யானையின் தந்தங்களிளிருந்து (Elephant Tusk) தான் தயாரிக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் பில்லியர்ட்ஸ் பந்துகள் தயாரிப்பதற்க்காகவே படுகொலை செய்யப்பட்டது. யானைகளின் நிலையை எண்ணி வருத்தப்பட்ட அமெரிக்க கண்டுபிடிப்பாளரான ஜான் வெஸ்லி ஹையாட் (John Wesley Hyatt, 1837 – 1920 AD) இதற்க்கு மாற்று வழி கண்டறிய தீவிரமாக முயற்சித்தார். தொடர்ந்து ஜான் வெஸ்லி, அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸின் கண்டுபிடிப்பை முன்மாதிரியாகக் கொண்டு 1868-ஆம் ஆண்டு பருத்தியிலிருந்து (Cotton) பிரித்தெடுக்கப்பட்ட செல்லுலோஸுடன் (Cellulose) நைட்ரிக் அமிலம் (Nitric Acid) மற்றும் கற்பூரம் (Camphor) ஆகியவற்றை சேர்த்து செல்லுலாய்ட் (Celluloid) என்ற புதியவகை பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தார்.

இவரது இந்த கண்டுபிடிப்பை பற்றி கேள்விப்பட்ட அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸ் வெஸ்லியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு 1868-ஆம் ஆண்டு இறுதிவாக்கில் செல்லுலாய்ட் பிளாஸ்டிக்கில் பில்லியர்ட்ஸ் பந்துகள் தயாரித்து 'Parkesine Company' மூலமாக விற்பனை செய்ய ஆரம்பித்தனர். இன்றளவும் டேபிள் டென்னிஸ் பந்துகள் இவர்கள் தயாரித்த அதே தொழில்நுட்ப முறையை பயன்படுத்தித்தான் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து புகைப்படக்கருவி (Camera), பேனா (Pen), பொம்மைகள் (doll) உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் தயாரிப்பிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டது. மேலும் மோசன் பிக்சர்ஸ் (Motion Picture) மூலம் 1882-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட உலகின் முதல் திரைப்பட தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட புகைப்படச்சுருள் (Photo Reel) இவர்கள் தயாரித்த பிளாஸ்டிக்கை பயன்படுத்திதான் தயாரிக்கப்பட்டது. இவரது கண்டுபிப்பின் மகத்துவத்தை சற்று தாமதமாக உணர்ந்துகொண்ட அமெரிக்க அரசாங்கம் 1914-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வேதியல் கண்டுபிடிப்புகளுக்கு கொடுக்கப்படும் உயரிய விருதான 'பெர்கின் மெடலை' (Perkin Medal) வழங்கி கெளரவித்தது.

அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸ் மற்றும் ஜான் வெஸ்லி ஹையாட் ஆகியோரது கண்டுபிடிப்புகளை முன்மாதிரியாகக்கொண்டு இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சின்தடிக் பிளாஸ்டிக் (Synthetic Plastic) எனப்படும் 100% செயற்கை பிளாஸ்டிக்கை, பெல்ஜியத்தை சேர்ந்த வேதியல் வல்லுனரான ஹென்றிக் பேக்லேண்ட் (Hendrik Baekeland, 1863 – 1944 AD) என்பவர் 1907 ஆம் ஆண்டு கண்டறிந்தார். பேக்லைட் (Bakelite) என்று அழைக்கப்பட்ட இவரது பிளாஸ்டிக்கில் தாவரதாதுக்கள் (Cellulose), பெனோ-பார்மால்டிகைட் (Pheno-Formaldehyde), மற்றும் நைட்ரிக் அமிலம் ஆகிய மூலக்கூறுகள் அடங்கியிருந்தது. மிகச்சுலபமான தயாரிப்பு முறைகள் மற்றும் மிகக்குறைந்த விலை ஆகியவற்றின் காரணமாக 'பேக்லைட்’' வணிகரீதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரேடியோ தயாரிப்பு, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் இந்த வகை பிளாஸ்டிக் மூலம் தான் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது. இதன் 100% மின்கடத்தாத்திறன் பெரும்பாலான எலெக்ட்ரிகல் உபகரணங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 1926-ஆம் ஆண்டு பாலிவினைல் குளோரைடு (Polyvinyl Chloride, known as PVC Plastic (PVC Pipes)), வகை பிளாஸ்டிக் தயாரிக்கும் முறையை வால்ட்டர் செமொன் (Walter Semon) என்பவர் கண்டறிந்தார். இதன் பிறகுதான் குழாய்கள் (Pipe) தயாரிப்பிலும் பிளாஸ்டிக் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து 1937-ஆம் ஆண்டு பாலியூரித்தீன் (Polyurethane) வகை பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஓட்டோ பாயர் என்ற ஜெர்மனியை சேர்ந்த வேதியல் வல்லுனர் கண்டறிந்தார், இதன் பிறகு பாலிஸ்ட்ரீன் (Polystyrene) வகை பிளாஸ்டிக் புழக்கத்தில் வர ஆரம்பித்தது. 

இன்று பெருமளவில் புழக்கத்தில் உள்ள பாலிஎத்திலின் டெரெப்தலைட் (Polyethylene Terephthalate, known as PET (Soft Drinks Water Bottle)) வகை பிளாஸ்டிக்கை இங்கிலாந்தை சேர்ந்த வேதியல் வல்லுனர்களான ஜான் ரெக்ஸ் வின்பில்டு (John Rex Whinfield) மற்றும் ஜேம்ஸ் டெனன்ட் டிக்சன் (James Tennant Dickson) ஆகிய இருவரும் இணைந்து 1941-ஆம் ஆண்டு தயாரித்தனர். அதுவரையில் மனித சமுதாயத்திற்கு எந்தவித தீங்கையும் ஏற்படுத்தாமல் சென்றுகொண்டிருந்த பிளாஸ்டிக்கின் பயணம் தடம் புரண்டு அழிவுப்பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது PET பிளாஸ்டிக் கண்டறிந்த பின்புதான்..!

பிளாஸ்டிக் என்ற சொல் கிரீஸ் நாட்டின் கிரேக்க மொழியில் இருந்து பிறந்து கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. பிளாஸ்டிக் என்ற சொல்லுக்கு கிரேக்கத்தில் ‘எளிதில் வடிவமைத்துக்கொள்ள இயலும்’ என்று பொருளாம். இன்று உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உள்பட நாம் அன்றாடம் பயன்படுத்தும் செருப்பு முதற்கொண்டு அனைத்தும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டு உலக சந்தையில் விற்க்கப்படுக்கொண்டிருக்கிறது, ஏனைய உலோகங்களை காட்டிலும் இதன் மலிவான விலை, எளிதில் கையாளும் திறன், நீடித்து உழைக்கும் தன்மை ஆகிய காரணங்களால் பிளாஸ்டிக் மிகக் குறுகிய காலத்திற்குள் இமாலைய வளர்ச்சியை எட்டிப்பிடித்தது. இன்று உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் பிளாஸ்டிக் பொருட்களை காணாமல் திரும்ப இயலாது.
Share:



சென்செக்ஸ் என்றால் என்ன? அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?


Image result for sensex

சென்செக்ஸ் என்ற வார்த்தை, நிதித்துறை வட்டாரங்களுக்கு அப்பாலும், மிகவும் புகழ்பெற்ற ஒரு சொல்லாடல் ஆகும். சென்செக்ஸ் என்றால் சென்சிடிவ் இன்டெக்ஸ், அதாவது, அடிக்கடி மாறக்கூடிய சுட்டெண் அல்லது குறியீட்டு எண் என்று அர்த்தம். இச்சொல் மும்பை பங்குச் சந்தை சென்சிடிவ் இன்டெக்ஸில் அடிக்கடி உபயொகிக்கப்படும் ஒரு சொல்லாக விளங்குகிறது. இந்தியாவின் மிகப் பழமையான இன்டெக்ஸான இது, மும்பை பங்குச் சந்தையின் மிகப் பெரியதான முப்பது பங்குகளின் போக்கைக் கண்காணிக்க உதவுகிறது.

இந்த 30 பங்குகளும், பல்வேறு பண்பளவுகளையும், குறியீட்டு முறைகளையும் பொறுத்து தேர்ந்தெடுக்கப்படுகிறன. பொதுவாக, இப்பங்குகள் அதிக மூலதன மதிப்பாக்கத்தைக் கொண்ட பங்குகளாகவே இருக்கும். தற்போது, பங்குச்சந்தையின் போக்கை கணிக்கக்கூடிய ஒரு சிறந்த அளவுகோலாக சென்செக்ஸ் விளங்குகிறது.

சென்செக்ஸ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

மும்பை பங்குச் சந்தையின் மிகப் பெரியதான முப்பது பங்குகளின் போக்கைப் பொறுத்தே சென்செக்ஸ் கணக்கிடப்படுகிறது. இவ்வாறு, கணக்கிடப்படுவதற்கு, "வரம்புகளற்ற மிதவை பங்கு மூலதன மதிப்பாக்கம்" என்ற பெயர் கொண்ட ஒரு வழிமுறை பின்பற்றப்படுகிறது. இம்முறை, உலகெங்கும் பரவலான வரவேற்பைப் பெற்ற ஒரு வழிமுறையாகும். ஒரு நிறுவனத்தில், நிறுவனரிடமோ அல்லது அரசிடமோ உள்ள பங்குகள் விற்பனைக்கு அனுப்பப்படமாட்டாது. இப்பங்குகள் தவிர்த்து, மற்ற சில பங்குகள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும்.

சென்செக்ஸ் தற்போது உள்ளடக்கிய பங்குகளின் பட்டியல் பின்வருமாறு:
பஜாஜ் ஆட்டோ, பாரதி ஏர்டெல், பி.ஹெச்.எல், சிப்லா, கோல் இந்தியா, டி.எல்.எஃப், கெயில் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹின்டால்கோ இண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோஸிஸ், ஐடிஸி, ஜிண்டால் ஸ்டீல், எல்&டி, மஹிந்திரா & மஹிந்திரா, மாருதி சுஸுகி, என்டிபிசி, ஓஎன்ஜிசி, ஆர்ஐஎல், எஸ்பிஐ, ஸ்டெர்லைட் இண்ட்ஸ், சன் ஃபார்மா, டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா ஸ்டீல், டிசிஎஸ் மற்றும் விப்ரோ
 மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகியவற்றுக்கு அடுத்ததாக எம்சிஎக்ஸ்- எஸ்எக்ஸ் இந்தியாவின் மூன்றாவது பெரிய பங்குச் சந்தையாக விளங்குகிறது.
Share:

அக்குளில் உள்ள முடியை 5 நிமிடத்தில் நீக்க

அக்குளில் உள்ள முடியை நீக்க பெரும்பாலானோர் ஷேவிங் தான் செய்வார்கள். ஆனால் நம் வீட்டு சமையலறையில் உள்ள இரண்டு பொருட்களைக் கொண்டு எளிய முறையில் அக்குளில் உள்ள முடியை நீக்கலாம். 



பெண்கள் பட்டுப்போன்ற சருமம் வேண்டுமென்று தங்கள் கை, கால் மற்றும் அக்குளில் உள்ள ரோமத்தை எல்லாம் நீக்குவார்கள். மேலும் ரோமத்தை நீக்க ஷேவிங், வாக்சிங் போன்றவற்றை மேற்கொள்வார்கள்.

குறிப்பாக அக்குளில் உள்ள முடியை நீக்க பெரும்பாலானோர் ஷேவிங் தான் செய்வார்கள். இப்படி ஷேவிங் செய்வதால், பலருக்கு அக்குளில் அரிப்புக்கள் மற்றும் எரிச்சல்கள் போன்றவை ஏற்படும்.

ஆனால் நம் வீட்டு சமையலறையில் உள்ள இரண்டு பொருட்களைக் கொண்டு எளிய முறையில் அக்குளில் உள்ள முடியை நீக்கலாம். 

அந்த இரண்டு சமையலறைப் பொருட்கள் தான் எலுமிச்சை மற்றும் சர்க்கரை. 

செய்யும் முறை 2 டீஸ்பூன் எலுமிச்சை மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரையை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 

பின் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். 

எவ்வளவு காலம் செய்ய வேண்டும்? 

இந்த சிகிச்சையை வாரத்திற்கு 2 முறை செய்ய வேண்டும். 

இப்படி செய்து வந்தால், அக்குளில் வளரும் முடியின் வளர்ச்சி குறைந்து, நாளடைவில் முடி வளர்வதே நின்றுவிடும். 

மற்றொரு முறை வேண்டுமானால் எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து, அக்குளில் தடவி 15 நிமிடம் கழித்து, ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இந்த முறையின் மூலமும் அக்குள் முடியை நிரந்தரமாக தடுக்கலாம். 

குறிப்பு: எலுமிச்சையை சருமத்திற்குப் பயன்படுத்திய பின், தவறாமல் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துங்கள். இதனால் எலுமிச்சையால் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுவதைத் தடுக்கலாம். முக்கியமாக இந்த முறையை அக்குளில் மட்டுமின்றி, கை, கால்களில் வளரும் முடியை நீக்கவும் பயன்படுத்தலாம்.
Share:

இப்படி தமிழில் கேட்டால் ????

Image result for indian hotel food menu


உணவகங்களில் சென்று இப்படி தமிழில் கேட்டால் ஏதோ வியக்கி நிற்கின்றான் பரிமாறுபவர்

சுடு சாம்பாரை கொட்டவோ அல்லது அடிக்க வந்தாலும் ஆச்சரியம் இல்லை....!

சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

கிச்சடி - காய்சோறு, காய்மா 

கேக் - கட்டிகை, கடினி 

சமோசா - கறிப்பொதி, 
முறுகி 

பாயசம் - பாற்கன்னல்

சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு 

பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி

பொறை - வறக்கை

கேசரி - செழும்பம், பழும்பம்

குருமா - கூட்டாளம்

ஐஸ்கிரீம் - பனிக்குழைவு

சோடா - காலகம்

ஜாங்கிரி - முறுக்கினி

ரோஸ்மில்க் - முளரிப்பால்

சட்னி - அரைப்பம், துவையல்

கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு

பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்

போண்டா - உழுந்தை

ஸர்பத் - நறுமட்டு

சோமாஸ் - பிறைமடி

பப்ஸ் - புடைச்சி

பன் - மெதுவன்

ரோஸ்டு - முறுவல்

லட்டு - கோளினி

புரூட் சாலட் - பழக்கூட்டு

தூய தமிழ் இன்னும் படித்தவர்களையே சென்றடையவில்லை... பாமரனை சென்றடைய இன்னும் எவ்வளவு காலம் பிடிக்குமோ...?
Share:

என்னை பற்றி...

My photo
Am Working as Assistant Professor in the Department of Information Technology at Sri Sairam Institute of Technology, Chennai.

முக்கிய செய்திகள்...

நாள்காட்டி

வானிலை



IP and Flag Counter

Wikipedia

Search results

QR Code Generator

All Conversion Widget

Recent Posts

Blog Archive

Copyright © பொன். சுதாகர் | Powered by Blogger
Design by SimpleWpThemes | Blogger Theme by NewBloggerThemes.com & Distributed By Bloggertemplates4u